tamilni 318 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பண்ணை ஆய்வுகளை நிறைவு செய்த இந்திய நிறுவனம்

Share

இலங்கையில் பண்ணை ஆய்வுகளை நிறைவு செய்த இந்திய நிறுவனம்

இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு, என்எல்டிபி (NLDP) என்ற தேசிய கால்நடை மேம்பாட்டு சபைக்கு சொந்தமான 31 பண்ணைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது.

என்எல்டிபி (NLDP) பண்ணைகளை அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது மற்றும் இலங்கையின் திரவ பால் தொழிற்துறையை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்கும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதை அடுத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது

ஆய்வின் போது அமுல் குழு பண்ணைகளின் நில பயன்பாடு, ஆண்டு உற்பத்தி, விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் பண்ணைகள் முழுவதும் பயன்படுத்தப்படாத நிலம் பற்றிய தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த தரவுகள் என்எல்டிபி (NLDP) பண்ணை மேம்பாட்டிற்கான புதிய திட்டத்தை உருவாக்க பயன்படுத்தப்படும்.

இந்தநிலையில் முன்மொழியப்பட்ட குத்தகை ஒப்பந்தம் உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து ஆட்சேபனைகளை எதிர்கொண்டுள்ளது.

எனினும், தமது வாழ்வாதாரம் மற்றும் பால் உற்பத்தியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதிருப்திகளை வெளிப்படுத்தி கடந்த சில மாதங்களாக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...