24 6754841331d88
இலங்கைசெய்திகள்

கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! தாஹிர் எம்.பி

Share

கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடமே உள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய 140 உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (11) திருகோணமலை ஜேபாக் மண்டபத்தில் இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வெற்றிபெற்ற 140 உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைகளோடு ஒத்துழைத்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இது கட்சியின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், கட்சி ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
25 684c110644e76
இலங்கைசெய்திகள்

கிழித்தெறியப்பட்ட பௌத்த தோரண பதாதைகள்! விளக்கமளித்த பெண்

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது....

images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு...

25 684befed3eedb
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ரைசிங் லயன்! ஈரானை உலுக்கிய தாக்குதலால் அணு ஆயுத விளிம்பில் மத்திய கிழக்கு

அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள், உயர் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இராணுவ...

images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக்...