அரசியல்இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா உதவும்!

Share
Getty standard american english 83297359 583fb4d45f9b5851e58d7214 1
Share

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.

இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது.

இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது.

நிதி தொடர்பான உத்தரவாதங்களை விரைவுபடுத்துவது என்ற பொதுவான இலக்கிற்காக இலங்கையுடன் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இச்செயன்முறையில் பங்கெடுத்துள்ள பரிஸ் கிளப்பின் ஏனைய உறுப்பினர்களுடனும் அதே இலக்கிற்காக இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவேளை இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவர்களின் ஏனைய அரச முகவர் அமைப்புக்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்ந்து செயற்படுவதாகவும் அமெரிக்க திறைசேரி உறுதியளித்துள்ளது.

மேலும் அமெரிக்காவால் இலங்கை மக்களுக்கென வழங்கப்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கான போஷாக்கு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான உணவு கூப்பன்கள், உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உரம் மற்றும் நிதியுதவி தொடர்பிலும் அமெரிக்கா நினைவுகூர்ந்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை அமெரிக்க திறைசேரி வரவேற்றுள்ளது.

அமெரிக்க திறைசேரி செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...