tamilni 72 scaled
இலங்கைசெய்திகள்

அம்பிட்டிய தேரருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Share

அம்பிட்டிய தேரருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாடானது இன்று(06.11.2023) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தேரருக்கு எதிராக தாம் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தாலும் இதுவரை அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, குறித்த தேரருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் தனுக்க ரணன்ஞக பதிவினை மேற்கொண்டுள்ளார்.

அம்பிட்டிய சுமனரத்தன தேரர், அண்மை நாட்களில் தமிழர்களுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு, தமிழர்களை வெட்டுவதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன், சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கைகளை பொலிஸார் எதிர்க்காமை குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்துக்கு சென்று குழப்ப நிலையையும் உருவாக்கியிருந்தார்.

இந்நிலையில், பொலிஸாரை எதிர்த்து குரல் எழுப்பிய அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக, பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமை குறித்து தாம் கவலையடைவதாக தனுக்க ரணன்ஞக கூறியுள்ளார்.

அம்பிட்டிய தேரருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Ambitiya Complaint Human Rights Commission

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...