IMG 20220529 WA0130
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயப் படுகொலை நினைவேந்தல்!

Share

யாழ்., வடமராட்சி, அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலைமையில் நடைபெற்றது.

1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து பாதுகாப்பு என நம்பித் தங்கியிருந்தவர்கள் மீதே அரச விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல் மூலம் 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலே நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பின்னர் அகவணக்கம், மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...