ஸ்ரீபால டி சில்வா
அரசியல்இலங்கைசெய்திகள்

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டு! – விசாரணைகள் ஆரம்பம்

Share

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழலுக்கு எதிரான முன்னணியினர் மேற்படி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டுக்கமையவே நேற்று அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக அவர் விரைவில் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் ஜப்பானின் தாய்சே நிறுவனத்திடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கும் சம்பவம் தொடர்பில் மேற்படி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடர்பில் இந் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் காரியாலய அதிகாரிகளிடமும் விடயங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...