DSCF6912
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம்!

Share

பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக பாடசாலை திறக்கப்படாது இருந்தமையால் முன்னாயத்தமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறு பிள்ளைகள் பாடசாலை வருவதால் சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு காணொலி மூலம் காண்பித்து சமூக இடைவெளி மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.

கிணறுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதனால் குளோரின் இட்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

போன்ற விடயங்கள் உள்ளடங்களாக சுகாதார நடைமுறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...