சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவர் பதவி விலகாமல் இது சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews

