செய்திகள்இலங்கை

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!

Share
ajith nivard cabraal 78678
Share

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!

மத்திய வங்கியின் ஆளுநராக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்து மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் – என்றார்.

இது தொடர்பில் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் ஆளுநராக பெரும்பாலும் நான் பெறுப்பேற்க உள்ளேன். நாடு தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியை சிறப்பாக நிர்வகிக்க வேண்டிய தேவை உள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கைக்கு அமையவே இராஜாங்க அமைச்சர் பதவியை அர்ப்பணிப்பு செய்து மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளேன்.

இதேவேளை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படுமென ஊடகவியலாளர் எழுப்பியக் கேள்விக்கு “அது கட்சி தீர்மானிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...