image 527bbd63e6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாடுகள் திருட்டு! – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

Share

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக மாடுகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

மாடுகள் தொடர்பில் உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பலதடவைகள் வலியுறுத்தியும் பொதுமக்கள் அசட்டயீனமாக நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதிகளிலும் , வீட்டுக்கு முன்னால் உள்ள மின்கம்பங்களிளும், கால்நடைகளை கட்டி வளர்ப்பதுடன் வீட்டின் வெளிக்கவினையும் ஒழுங்கான முறையில் பூட்டாததன் காரணமாக இவ்வாறு கால்நடைகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

கால்நடை வளர்ப்பாளர்களின் அவதான குறைபாடே இவ்வாறு கால்நடைகள் திருடப்படுவதற்கு காரணமாக அமைவதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான கால்நடைகள் இவ்வாறு இறைச்சி வியாபாரிகளினால் திருடப்படும் செல்கின்றது.

தமது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை ஒழுங்கான முறையில் பராமரித்து வளர்ப்பதன் மூலம் இவ்வாறு திருட்டுக்களை கட்டுப்படுத்த முடியும் என பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக கோப்பாய், அச்சுவேலி கரவெட்டி, நீர்வேலி, கோப்பாய்  பகுதிகளில் கால்நடைகள் திருட்டு சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட மூத்த பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...