image 527bbd63e6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாடுகள் திருட்டு! – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

Share

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக மாடுகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

மாடுகள் தொடர்பில் உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பலதடவைகள் வலியுறுத்தியும் பொதுமக்கள் அசட்டயீனமாக நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதிகளிலும் , வீட்டுக்கு முன்னால் உள்ள மின்கம்பங்களிளும், கால்நடைகளை கட்டி வளர்ப்பதுடன் வீட்டின் வெளிக்கவினையும் ஒழுங்கான முறையில் பூட்டாததன் காரணமாக இவ்வாறு கால்நடைகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

கால்நடை வளர்ப்பாளர்களின் அவதான குறைபாடே இவ்வாறு கால்நடைகள் திருடப்படுவதற்கு காரணமாக அமைவதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான கால்நடைகள் இவ்வாறு இறைச்சி வியாபாரிகளினால் திருடப்படும் செல்கின்றது.

தமது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை ஒழுங்கான முறையில் பராமரித்து வளர்ப்பதன் மூலம் இவ்வாறு திருட்டுக்களை கட்டுப்படுத்த முடியும் என பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக கோப்பாய், அச்சுவேலி கரவெட்டி, நீர்வேலி, கோப்பாய்  பகுதிகளில் கால்நடைகள் திருட்டு சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட மூத்த பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...