basil
அரசியல்இலங்கைசெய்திகள்

பஸிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Share

மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து அங்கு சொகுசு இல்லத்தை நிர்மாணித்தமையின் ஊடாக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பானஉத்தரவு அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்படவிருந்தது.

எனினும், வழக்கின் பிரதிவாதிகள் நேற்று மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

முதலாவது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச நாட்டின் தற்போதைய நிலை காரணமாகவும், திருக்குமார் நடேசன் சுகவீனம் காரணமாகவும் மன்றில் முன்னிலையாகவில்லை என அவர்களது சட்டத்தரணி மன்றுரைத்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...