செய்திகள்இலங்கை

கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை

Share
sanakyan scaled
Share

கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை

கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்

நேற்றைய தினம் (21)  நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த கொரோனா சூழலில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களில் எண்ணிக்கையும் குறைவாகவுள்ளது , அவ்வகையில் குறித்த மாகாணங்களில் செயலாற்றிக்கொண்டிருக்கும் சுகாதார துறை சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதனைப்போன்றே பேசப்படாத பிரிவினராகக் காணப்படும் கிராம சேவகர்கள் தொடர்பாகவும் பேசவேண்டும், அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்படுவதைப் போலவே கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன் – என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...