24 660275f96ad98
இலங்கைசெய்திகள்

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

Share

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

இந்திய அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் அதீத ஈடுபாட்டால் இலங்கை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

சில அதிகாரிகள் குறித்த திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை விரைவாகக் கண்காணிக்க உதவுவதில்லை” என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தால் நாட்டிற்கு நேரடியான பலன் இருந்தாலும் அவர்கள் இந்தியாவை நம்பவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 26 ஆண்டுகால ஆயுத மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டமையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

“வடக்கு-கிழக்கு பிரதேசம், முதலீட்டின் பற்றாக்குறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், இலங்கையில் அதன் சமீபத்திய பல பரிமாண பாதிப்பு சுட்டியை வெளியிட்டது.

அதில் வடக்கு-கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்களில் பெரும் சதவீதத்தினர் பல பாதிப்புகளை கொண்டிருப்பதாகக் காட்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பரிமாண பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

இருந்த போதிலும், இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மை விஞ்ஞானியான ரொஹான் பெத்தியகொட, அதானியின் இந்த திட்டத்தை “மற்றொரு வீணான மோசடி” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அதன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்கம் மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...