சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இன்று முதல் திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆர்.எஸ். தமிந்தவுக்கு தென் மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தென்மாகாணத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எல்.கே.டப்ள்யூ. கே. சில்வா கிழக்கு மாகாணத்திலிருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment