sar scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் 680 பாடசாலைகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை

Share

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பஸ் சேவை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தள்ளார்.

கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்கள் உட்பட தரம் 1 – தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியான ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆசிரியர்களுக்கு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிற்சியளிப்பதற்கு மாகாண சபை நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

எனவே அனைத்த ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகள் எதிர்வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...