sar scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் 680 பாடசாலைகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை

Share

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பஸ் சேவை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தள்ளார்.

கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்கள் உட்பட தரம் 1 – தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியான ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆசிரியர்களுக்கு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிற்சியளிப்பதற்கு மாகாண சபை நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

எனவே அனைத்த ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகள் எதிர்வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...