IMG 20230418 WA0099
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு பனை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை!

Share

வடக்கு மாகாணத்தில் பனை வளம் அழிக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் விசேட வேலை திட்டம் ஒன்று பனை அபிவிருத்திசபை,தென்னை பயிற்செய்கைசபை இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக
தென்னை பயிற்செய்கை சபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன் தெரிவித்தார்.

இன்று யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

வட மாகாணத்தில் தென்னை செய்கையும் பனை செய்கையும் கூடுதலான அளவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

ஆனால் பனை என்ற வளம் மிக முக்கியமானது வடக்கு மாகாணத்தின் வளங்களாக இரண்டு கண்கள் காணப்படுகின்றன ஒன்று தென்னை மற்றையது பனை

ஆனால் பனை வளம் படிப்படியாக ஓரளவுக்கு குறைந்து கொண்டு செல்கின்றது தென்னைசெய்கைவீதம் கூடுதலாக இருக்கின்றது

பனையினை வெட்டி தென்னை செய்கையினை கூடுதலாக செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது

எமது பரிந்துரைக்கிணங்க தென்னை பனை செய்கையினை ஒன்றாக இணைத்து செய்வதற்குரிய ஆராய்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது

அதாவது ஒரு புதிய வேலை திட்டம் ஒன்றினை நாங்கள் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

அதற்கான முன்னாயத்த வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன குறிப்பாக தென்னை செய்கையை மேற்கொள்ளாது பனை மரம் அழிப்பதை நிறுத்துவதும் பனை தென்னையை ஒன்றாக இணைத்து வளர்ப்பதை ஊக்குவிப்பதே அதன் நோக்கமாகும்.

இதற்கான திட்டம் விரைவில் பனை அபிவிருத்தி சபையும் தென்னை பயிற்செய்கை சபையும் இணைந்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது மேற்கொள்ளப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 19
செய்திகள்இந்தியா

மதுரை மத்திய தொகுதி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சுந்தர் சி களம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள புதிய...

Untitled 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியில் நிதானம்: இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கம்!

இலங்கையில் தற்போது புதிய நெல் அறுவடை சந்தைக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி...

Untitled 17
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் புதிய போர்முனை: இஸ்ரேல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion)...

Untitled 16
செய்திகள்விளையாட்டு

தமிழக சட்டமன்ற தேர்தல் – 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் த.வெ.க!

இந்தியாவின் தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம்...