rtjy 23 scaled
இலங்கைசெய்திகள்

நிதி இராஜாங்க அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை

Share

நிதி இராஜாங்க அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை

புதிய ஸ்டிக்கர் முறையை திட்டமிட்டு மாற்றியமைத்து மதுபானத்தை விற்பனை செய்து மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய ஸ்டிக்கர் முறையை திட்டமிட்டு மாற்றியமைத்து மதுபானத்தை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வரை அவ்வாறான ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வரை அபராதம் அறவிடப்படும். தண்டனையை மீறிச் செயல்படுபவர்களின் மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...