செய்திகள்இலங்கை

பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!!

Namal Rajapakse gossip
Share

பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!!

பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு சிறப்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவற்றை நிவர்த்திசெய்யும் முகமாக முதற்கட்டமாக வலய பாடசாலைகளை இணைத்து ,கல்வி மத்திய நிலையம் ஒன்றில் இணைய கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை ஆயிரம் பாடசாலை இணைய இணைப்பு என்ற எண்ணிக்கையில் முன்நகர்த்த தீமானித்துள்ளோம்.

மாணவர்களின் பாடசாலை நூல்களை இணையத்தில் குரல்வழி பாடமாக பதிவேற்றி செய்மதி தொழில் ஊடாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அதிவேக இணைய வசதியுடன் கூடிய கற்றல் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கல்வி அலைவரிசை ஊடாக,நேரசூசி அடிப்படையில் தொலைக்காட்சியில் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கல்வி நடவடிக்கை சென்றடையும் வாய்ப்பை உருவாக்குவோம் – எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...