download 4
இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Share

தமது கற்றல் கால எல்லையை கடந்த 05 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாகவும் அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை வேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இது சட்டவிரோத செயல் என்று தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மேற்குறிப்பிட்ட பணிப்புரையை விடுத்துள்ளார்.

தமது கற்றல் கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பட்டப்படிப்பை முடிப்பதற்கு 3 வருடங்கள் அவகாசம் வழங்கப்படுகின்ற போதிலும் அவ்வாறான மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பதால் செலவீனங்கள் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் காலப்பகுதியில் கற்பித்தல், விடுதிகள், நீர், மின்சாரம், கற்பித்தல் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, தமது கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாவிடின், அவற்றுக்கான செலவீனங்களை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....