drgf
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

நாளை வலி.வடக்கில் 30 ஏக்கர் காணி சுவீகரிப்பு – அணி திரளுமாறு சஜீவன் அழைப்பு!!!

Share

வலிவடக்கு பிரதேசத்தின் நகுலேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர்கள் பிரவில் உள்ள 30க்கும் அதிகமானோரின் 25க்கும் அதிக ஏக்கர் காணி இலங்கை அரச படைகளின் தேவைகளுக்காக நாளைய தினம் சுவீகரிக்கப்படவிருக்கிறது.

காங்கேசன்துறை மேற்கு பிரதேசத்தில் மட்டும் 26 பேருக்கு சொந்தமான 19 ஏக்கருக்கும் அதிக காணி அளவிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினரும் சமூக செயற்பட்டாளருமாகிய சஜீவன் கருத்து வெளியிடுகையில் , பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் திட்டமிட்டபடி அரசால் சுவீகரிக்கப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக அரச இயந்திரத்தின் பூரண ஆதரவுடன் வடக்கின் பெறுமதியான காங்கேசன்துறை துறைமுகமும் அதனுடன் இணைந்த கீரிமலை புனித பூமி பகுதியில் உள்ள காணிகளும் நாளைய தினம் அளவிடப்பட விருக்கிறது.

எனவே காணி உரிமையாளர்கள் , தமிழ்த்தேசிய பற்றாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த அளவீட்டு நடவடிக்கையை முறியடிக்க ஒன்றிணையுமாறு பகீரங்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...