image 65b0184e20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் விபத்து – இளைஞன் பலி!!

Share

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான  வீதியின் அராலிச்சந்தி பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பஹா பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து பட்டாவாகனத்தை மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் மூன்றாம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலா ராஜா ஜனட்மாறன் (வயது 25) என்ற இளைஞன்  உயிரிழந்துள்ளார்.

ஊர்காவல் துறை பகுதிக்கு பிட்டிங் வேலை ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பட்டா வாகனத்துடன் நயினாதீவு ஆலய வழிபாட்டுக்கு சென்று விட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து அராலிச்சந்தியில் மோதி விபத்தினை ஏற்படுத்தி இருந்தது.

விபத்துடன் தொடர்புடைய கம்பஹா கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...