13 30
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இவ்வருடம் வீதி விபத்துக்களில் எட்டு உயிர்கள் பலி

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துக்கள் காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான இந்த மாதத்திற்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி போக்குவரத்துகளில் அதிகரித்த வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் என்பவற்றினால் வீதிபத்துக்கள் அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கலந்துரையாடல் மூலமாக தெரியவந்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் விபத்துக்களை தடுப்பது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...