கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மீன்பிடி அனுபவம் இல்லாமல் நண்பன் ஒருவனுடன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் சென்று ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புளியந்தோப்பு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27  வயதுடைய அன்பழகன் ஜாக்சன் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர் நேற்று இரவு தனது நண்பனுடன் ஒன்பதாம் வட்டார பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
இதன் போதே இவரை சுழி இழுத்துள்ளது.
நீண்ட நேரமாக இளைஞன் காணாமல் போன நிலையில் பின்னர் சடலமாக மிதந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
WhatsApp Image 2023 04 01 at 5.07.09 PM 1
#SriLankaNews
Exit mobile version