pQgeDGRZLM119QaTzYdf
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கணவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் போராடும் மனைவி!

Share

கணவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் போராடும் மனைவி!

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் போசாக்கின்மை காரணமாக ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 75 வயதான கணவரின் சடலம் 11 நாட்களாகியும் இறுதிக்கிரியைகள் செய்ய மனைவியிடம் பணம் இல்லாத நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

திக்வெல்ல பதிகம, மஹகெதர தோட்டத்தில் தேங்காய் உடைத்து பிழைப்பு நடத்தி வந்த புஸ்ஸல ஹேவகே வீரசேன (வயது 75) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மரண விசாரணையின் போது, ​​அவரது மனைவி நவுருன்னகே சோமாவதி (77) கூறுகையில்,

தனக்கு பிள்ளைகள் இல்லை எனவும் தென்னந்தோப்பு உரிமையாளர் கொடுத்த சிறிய வீட்டில் கணவருடன் வசித்து வருவதாகவும், அயலவர்கள் தனக்கும் தனது கணவருக்கும் உணவு கொடுத்ததாகவும், தனது கணவர் பத்கம அரச மருத்துவமனையில் இருந்து மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், பணம் இல்லாததால் அவரை பார்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கணவரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், அரசு செலவில் இறுதிச் சடங்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட மாத்தறை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி டி.டி. இடது நுரையீரலில் நிமோனியா நோயுடன் ஆஸ்துமா அதிகரித்ததன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, அரச செலவில் சடலத்தை அடக்கம் செய்ய முடியுமா என மாத்தறை மாநகரசபை மரண விசாரணை அதிகாரி லலித் டி சில்வா பாடிகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் நிஷாதி ரஷானி மத்மியாவை கேட்டுள்ளார்.

எனினும் உயிரிழந்தவரின் மனைவி இருப்பதால், அரச செலவில் இறுதிச் சடங்குகள் செய்ய உயிரிழந்தவரின் உடலை ஏற்க முடியாது என கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்குள்ளான மனைவி கணவனின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு உதவியை நாடி போராடி தோல்வியடைந்துள்ளார்.

இது தொடர்பில் திக்வெல்ல பிரதேச செயலாளர் சுசந்த அத்தநாயக்க தெரிவிக்கையில்,

யாருமில்லாதவர்களுக்கு மாத்திரம் அரச செலவில் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள முடியும். மனைவி உயிருடன் உள்ளதால், கிராம அதிகாரியால் உடலை பொறுப்பேற்று அரச செலவில் இறுதி சடங்கு செய்ய முடியாது என்றும், கிராமத்துடன் சேர்ந்து அதனை செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...