dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நெருக்கடிக்கு தீர்வு – விரைவில் தேசிய சபை

Share

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை அமைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய சபையை அமைப்பதற்கான யோசனைகளை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தேசிய சபையின் தலைவராக செயல்படவுள்ளதுடன் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபை முதல்வர், மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா ஆகியோர் அதிகாரங்களை கொண்ட உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சபையில் உள்ளடங்கவுள்ளனர். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையை அமைக்குமாறு சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தமையை கவனத்திற் கொண்டு இந்த தேசிய சபை அமைக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...