5 19
இலங்கைசெய்திகள்

ஜேவிபியின் வீரர்களுக்கு நீதி வேண்டும்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

ஜேவிபியின் வீரர்களுக்கு நீதி வேண்டும்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உட்பட உயிரிழந்த மக்கள் விடுதலை முன்னணி வீரர்களின் உயிரிழப்புக்களுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னிலை சோசலிசக் கட்சி எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளது. .

1988 – 1989 காலப்பகுதியில் அரச அங்கீகாரம் பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பித்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுதரவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 13ஆம் திகதி அனுஸ்டிக்கப்படும், 35 ஆவது “இல்மஹா விரு சமருவ” என்ற உயிர்நீத்த ஜேவிபியினரின் நினைவேந்தல் தொடர்பில், ரோஹன விஜேவீர உள்ளிட்டோரை கௌரவித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பின்னால் இருந்தது “அரச பயங்கரவாதம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் 1988-1989 தென்னிலங்கை எழுச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, வடக்குகிழக்கின் உள்நாட்டு மோதலின் போதும் இது பரவியிருந்தது. என்று முன்னிலை சோசலிக்கட்சி கூறியுள்ளது.

முன்னைய நிர்வாகங்களால் இந்த கோரிக்கைகளுக்கு உண்மையான நீதியை கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையில்,ரோஹன விஜேவீர உட்பட மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வகையில் விரிவான விசாரணைக்கு முன்னுரிமை அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...