விளையாட்டுத்துறை
இலங்கைசெய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு புதிய சிக்கல்!! வெளியான தகவல்

Share

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு புதிய சிக்கல்!! வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவாதம் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஆரம்பமாகும் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் இது தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேள்விகளை எழுப்ப உத்தேசித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாவுக்காக 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலக அதிகாரிகளுக்காக 67 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

‘ தலைவர் சம்மி சில்வாவுக்கு 11.7 மில்லியன், செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு 5.4 மில்லியன் ரூபா, உப தலைவர்கள் ஜயந்த தரமதாச 5.1 மில்லியன் மற்றும் ரவீன் விக்கிரமரத்ன 4. 7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் உலகக் கோப்பைக்கான விசா வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

32 வீரர்கள் உட்பட 52 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப விளையாட்டு அமைச்சரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாத 35 நபர்களுக்கான வீசா கோரிக்கை கடிதங்கள் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சம்மி சில்வாவின் மனைவி, மைத்துனர் மற்றும் மாமியார் உட்பட 21 உறவினர்கள் மற்றும் நண்பர்களும் அடங்கியிருந்தாக ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை உப தலைவர் ஜயந்த தர்மதாசவுடன் தொடர்புடைய நடிகை ஷலனி தாரகாவுக்கும் அவுஸ்திரேலியா செல்வதற்கு விசா வழங்குமாறு கோரப்பட்டது.

மேலும், செயற்குழு உறுப்பினர்கள் 8பேரின் மனைவிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேர், இலங்கை கிரிக்கெட் சபையின் ஒன்பது அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவிகள் இருவர் மற்றும் மற்றொரு நபர் சார்பாக விசா கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

போட்டியை பார்வையிடச் சென்ற சஞ்சீவ நிசாந்த டி சில்வா நாடு திரும்பவில்லை. அத்துடன் பயணச்சீட்டு கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமையினால், மனித கடத்தல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...