சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக பொலிசாருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபர் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து நடாத்திய தேடுதலின் போதே குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment