Untitled 1 31 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் குடும்பப் பெண் உயிரிழப்பு!! ஒருவர் கைது!!

Share

யாழில் தீக்காயங்களுக்கு இலக்காகி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் (25.03.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற இரு பிள்ளைகளின் தாயொருவர் எரிகாயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் (24.06.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ பரவியுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த பெண்ணை எரிகாயங்களுடன் மீட்ட இடத்தில் மண்ணெண்ணெய் போத்தலோ, கலனோ இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், உயிரிழந்த பெண்ணின் கணவருடன் நெருக்கமான இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர் போதைப்பொருள் வாங்குவதற்காக சில நாட்களாக, உயிரிழந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளதாகவும், இந்த விடயம் கணவருக்கு தெரியவர அந்த இளைஞரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கண்டித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த பெண்ணின் எரிகாயங்களுக்கு அந்த இளைஞரே காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், அயலவர்களும் அதே விடயத்தை கூறியுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்தே குறித்த இளைஞர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இறப்பு விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...