இலங்கைசெய்திகள்

கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்! 

Share
1629371978 1618491646 court 2
Share

கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்!

கசிப்பு வடிக்கும் கோடாவுடன் கைதான இருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தால் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் 196 லீட்டர் கோடாவுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 10 ஆம் திகதி தொல்புரம் – வீராவத்தை பகுதியில் 10 லீட்டர் கோடா மற்றும் ஒரு லீட்டர் கசிப்புடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபரொருவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...