images 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய இனப் பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும்! – சித்தார்த்தன் வலியுறுத்து

Share

” முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளமையானது, இன ஐக்கியத்தின் சிறந்ததொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புகின்றேன். அதேபோல தேசிய இனப் பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அப்போது இந்நாடு மீளெழுச்சிபெறும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் ,இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ போரில் உயிரிழந்த மக்களுக்கு முள்ளிவாய்க்காலிலும், வடக்கு, கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் நேற்று (நேற்று முன்தினம்) நினைவேந்தல் மிகவும் உணர்வூப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இம்முறை விசேடமாக, காலி முகத்திடலிலும் அந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.இதனை நல்லதொரு ஆரம்பமாக – அறிகுறியாக நான் பார்க்கின்றேன்.இளைஞர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இன ஒற்றுமைக்கான சிறந்த ஆரம்பமாக அமையும் என நம்புகின்றேன்.

ஆட்சி முறைமை மாற்றம், அரசமைப்பு மாற்றம் பற்றியெல்லாம் தற்போது பேசப்படுகின்றது. எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் தாங்களும் இலங்கையர்கள் என்ற உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்குவார்கள். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து முதலீடுகள் வரும். அரசியல் தீர்வே நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக அமையும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...