27 2
இலங்கைசெய்திகள்

இரண்டு மாதங்களுக்குள் 9ஆயிரம் இணையக்குற்ற முறைப்பாடுகள்

Share

இரண்டு மாதங்களுக்குள் 9ஆயிரம் இணையக்குற்ற முறைப்பாடுகள்

இந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் இணைய குற்றச் செயல்கள் தொடர்பில், 9,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இணையக் குற்றச் செயல்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கவலையளிக்கும் வகையில், இந்த முறைப்பாடுகளில் 80 வீத சமூக ஊடக தளங்களை உள்ளடக்கிய குற்றங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் சிறுவர்களை மிரட்டிய 85 முறைப்பாடுகளும், சிறுவர் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய 40 முறைப்பாடுகளும் உள்ளடங்கியுள்ளன.

இதனால் இணையப் பயனர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் இணைய அச்சுறுத்தல்கள் தொடர்வதால், தனிஆட்களும் நிறுவனங்களும் விழிப்புடன் இருப்பதும், சாத்தியமான இணையத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...