யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே – 141 மற்றும் ஜே – 142 ஆகிய கிராம சேவகர் பிரிவு பகுதிகளிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment