302079395 6374679712559571 216255129809753730 n
இலங்கைசெய்திகள்

தாமரைக் கோபுரத்தில் இணைந்தனர் 80% உள்ளூர் முதலீட்டாளர்கள்

Share

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் 80% உள்ளூர் முதலீட்டாளர்களும், 20% வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இணைந்துள்ளனர்.

15க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரம் சமீபத்திய 5G இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். தாமரைக் கோபுரத்தை கட்டுவதற்கான மொத்த செலவு 113 மில்லியன் டொலர் 2024 க்குள் மீட்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆம் திகதி முதல் திறக்கப்படும் தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம்-
ஆறு சொகுசு அறைகள் (6 வது தளம்), ஒரு கண்காணிப்பு தளம் (7 வது தளம்) பிரபலமான உணவகங்கள், பப் (Pub) மற்றும் சுழலும் உணவகம் (5 ஆவது தளம்) , விருந்து மண்டபம் (4 வது தளம்) மேலும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவப்படுகிறது.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...