யாழ். மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கைதடி முதியோர் இல்லத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட வயோதிபர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏனையோர் குழந்தையை பிரசவித்து 10 நாள்களே ஆன யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 32 வயதுடைய பெண் ஒருவர், கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர், இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர், கொக்குவிலைச் சேர்ந்த சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர், மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர், பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர், உடுவிலைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் கியோரே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களாவர்.
இந்த உயிரிழப்புக்களைத் தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment