நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இந்த நிவாரண திட்டம் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு செயல்பாட்டுக்கு வரும்.. அதேவேளை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 7,500 ரூபா வழங்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment