இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மருத்துவக் கழிவுகளை எரியூட்டி நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம்!

Share
Waste 1
Share

யாழ்.பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.

தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனை என மன்று தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை , யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள தமக்கு சொந்தமான காணியில் கொட்டி , எரியூட்டிய நிலையில் அயலவர்களால் , மாநகர சபை உறுப்பினர்களுக்கு, அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு மாநகர சபை உறுப்பினர்கள் , சுகாதார பிரிவினர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை உரிமையாளருக்கு எதிராக, யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்நிலையில், இன்றையதினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ,

Waste01 1

1.பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிக்கு பாவித்த மருந்து போத்தல்களை வீசியமை

2.தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிகளினது Toilet pampers வீசியமை

3.தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த ஊசிகளை வீசியமை

4. தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த சேலைன் போத்தல்களை வீசியமை

5. தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த இரத்த பரிசோதனை குப்பிகளை வீசியமை

6.சந்திர சிகிச்சைக் கையுறை மற்றும் அங்கிகளை வீசியமை

7. தொற்று நோயை பரப்பும் வகையில் றெஜிபோம் மற்றும் படுக்கை மெத்தைகளை வீசியமை

ஆகிய 7 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

அனைத்து குற்றச்சாட்டுக்களையும் வைத்தியசாலை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதனை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , ஒவ்வொரு குற்றத்திற்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை விதித்தது.

தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...