law
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரச வங்கியில் 68 மில்லியன் பண மோசடி! – முகாமையாளருக்கு மறியல்

Share

அரச வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கே விளக்கமறியல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 48 தனிநபர் கடன் ஆவணங்கள் மூலம் ஆறு கோடியே 83 லட்சத்து 40,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட நீண்ட கால விசாரணையின் பின்னர் கடந்த 5ஆம் திகதி, குறித்த சந்தேக நபர் பண மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபர் வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற 62 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 9
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த...

25 69222852bdb1d
செய்திகள்உலகம்

கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள்: Gemini AI இணைப்புடன் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி!

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் (Google Maps) இருந்தால் போதும், நாட்டின் எந்தப் பகுதிக்கும்...

New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...