1731510018 WhatsApp Image 2024 11 13 at 7.13.31 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரணப் பொருட்களிலும் கைவரிசை: கூரை ஓடுகளைப் பிரித்து 55 உலர் உணவுப் பொதிகள் திருட்டு!

Share

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டலக்குடா கிராமம்.

கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது போக எஞ்சிய 181 பொதிகள், அங்கிருந்த மரண விசாரணை அதிகாரி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இனந்தெரியாத நபர்கள் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி உள்ளே புகுந்துள்ளனர்.

சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 55 உலர் உணவுப் பொதிகளைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மண்டலக்குடா கிராம அலுவலரால் நேற்று (27) சனிக்கிழமை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணப் பொருட்களைத் திருடிய மனிதாபிமானமற்ற இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...