1731510018 WhatsApp Image 2024 11 13 at 7.13.31 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரணப் பொருட்களிலும் கைவரிசை: கூரை ஓடுகளைப் பிரித்து 55 உலர் உணவுப் பொதிகள் திருட்டு!

Share

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டலக்குடா கிராமம்.

கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது போக எஞ்சிய 181 பொதிகள், அங்கிருந்த மரண விசாரணை அதிகாரி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இனந்தெரியாத நபர்கள் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி உள்ளே புகுந்துள்ளனர்.

சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 55 உலர் உணவுப் பொதிகளைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மண்டலக்குடா கிராம அலுவலரால் நேற்று (27) சனிக்கிழமை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணப் பொருட்களைத் திருடிய மனிதாபிமானமற்ற இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...