இலங்கைசெய்திகள்

வடக்கிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது டெல்டா – வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!

Share
delda
Share

நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த முடிவுகளின்படி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும் ஏனைய பிரிவுகளில் தலா 5 பேருமாக 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...