1 4 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பஞ்சிகாவத்தையில் பொலிஸ் வாகனங்கள் அடித்து உடைத்து எரிப்பு!

Share

கொழும்பிலுள்ள நகர்ப்பகுதியான பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தில் மாத்திரம் 5 பொலிஸ் வாகனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து உடைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகையின் முன்பாகவும், காலிமுகத்திடலில் ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர்கள் மீது இரும்புக் கம்பிகளுடன் நேற்றுப் பகல் வந்த ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்துடன் குறித்த இரு இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆகிய கூடாரங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கித் தீயிட்டு எரித்திருந்தனர்.

மேற்படி இரு தாக்குதல் சம்பவங்களும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அரச வன்முறையாளர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு 10, பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தின் வீதியில் நேற்று மாலை இறங்கிய அப்பகுதி மக்கள், நள்ளிரவு வரை மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பஞ்சிகாவத்தை சுற்றுவட்டப் பகுதிகளால் வந்த பொலிஸாரின் 5 வாகனங்களை இடைமறித்த மக்கள், அதிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கினர்.

மக்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் தாம் வந்த வாகனங்களைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். எனினும், மக்களின் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் மயங்கி வீழ்ந்து கிடந்தார். அவரை வீதியால் வந்த தனியார் வாகனம் ஒன்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மக்கள் அனுப்பிவைத்தனர்.

இதேவேளை, மக்களின் பிடிக்குள் சிக்கிய 5 பொலிஸ் வாகனங்களும் (ஜீப் 01, ஹயஸ் 01, பஸ் 01, கார் 02) வீதியில் வைத்து அடித்து உடைக்கப்பட்டன. அதன்பின்னர் அவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

நேற்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையிலான 6 மணிநேரத்துக்குள் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றன. நள்ளிரவு 12 மணிவரை மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

#SriLankaNews

2 3 scaled

3 3 scaled

4 3 scaled

5 2 scaled

6 1 scaled

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...