rtjy 9 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் சிக்கிய ஐவர்

Share

யாழில் ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் சிக்கிய ஐவர்

யாழில் கெப் ரக வாகனம் மற்றும் ஒன்றரை கோடி ரூபா பணம் என்பவற்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் பகுதியில் கடந்த 29, 30ஆம் திகதிகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

கெப் வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி பொருத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனம் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேகநபர்களை கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல் மற்றும் ஊவா மாகாணம், குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார்சைக்கிள் மற்றும் 15 மில்லியன் (1.5 கோடி) ரூபா பணம் என்பன மீட்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...