யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் சாவு!!

AP 20346455118010

Sri Lankan municipal workers carry a body of a COVID-19 victim for cremation in Colombo, Sri Lanka, Friday, Dec. 11, 2020. (AP Photo/Eranga Jayawardena)

யாழ்ப்பாணத்தில் இன்று(25) புதன்கிழமை மேலும் 5 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்களுடன் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version