இலங்கைசெய்திகள்

வீதி அபிவிருத்திக்கு மட்டும் 44 கோடி!!

Share

கடந்த இரண்டு வருடங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்ட தொகை 44 ஆயிரத்து 300 கோடி ரூபா என நிதியமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு அதற்கான செலவு இருபத்தொராயிரத்து முந்நூறு கோடி ரூபாவாகவும், 2020ஆம் ஆண்டில் இருபத்து மூவாயிரம் கோடி ரூபாவாகவும் செலவாகியுள்ளது.

கடந்த ஆண்டு, ஒருங்கிணைந்த வீதி மேம்பாட்டுத் திட்டத்துக்காக நான்காயிரத்து எண்ணூற்று நாற்பது கோடி ரூபாவும், பிரதான வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அணுகுவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வீதி அமைப்பதற்கும் நான்காயிரத்து எண்ணூற்று இருபத்தி ஆறு கோடி ரூபா செலவிடப்பட்டது.

மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்காக முந்நூற்று ஐம்பத்தைந்து கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து முந்நூற்று முப்பத்திரண்டு கோடி ரூபாவாகும்.

கொழும்பின் வெளிவட்ட வீதிக்கு நூற்றியாறு கோடி ரூபாவும், கோபுரங்கள் மீது உத்தேச துறைமுக நுழைவு வீதிக்கு நானூற்றி ஐம்பத்தைந்து கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...