34 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் தகவல்

Share

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் தகவல்

இலங்கையில் (Sri lanka), கண்டி (Kandy)- போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நீதிஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை 1959 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலும் 31 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் 1969 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையிலும் 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அதற்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...