32 2
இலங்கைசெய்திகள்

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்

Share

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்

அரச உர நிறுவனங்களான லங்கா உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 278 பேர் இன்று (18) முதல் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர்.

குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேற்படி, இரண்டு உர நிறுவனங்களும் இனி ஒரு நிறுவனமாக ஒரு தலைவர் மற்றும் ஒரு இயக்குநர் குழுவின் கீழ் செயல்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற 278 ஊழியர்களுக்கும் 8 இலட்சம் ரூபா தொடக்கம் 90 இலட்சம் ரூபா வரையான ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு கிரிபத்கொடையில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இந்த கட்டாய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...