24 6621a17cbc52c
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

Share

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் பதினெட்டாயிரத்தால் அதிகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் காரணமாக கைதிகள் பலர் மாறி மாறி உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், ​​

இந்த கடுமையான நிலைக்கு மாற்றாக கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சில கைதிகள் ஹொரணை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பூசா கைதிகள் பல்லசேன முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் சுமார் 670 கைதிகளை அடைத்து வைக்க முடியும் எனவும், தற்போது 2000க்கும் அதிகமான கைதிகள் அங்கு இருப்பதாகவும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 300 கைதிகள் இருக்க முடியும் ஆனால் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மஹர சிறைச்சாலைகளில் 670 கைதிகளுக்கான வசதிகள் இருந்த போதிலும் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காலி சிறைச்சாலையில் 270 கைதிகள் உள்ள போதிலும் 1100 கைதிகள் இருப்பதாக காலி சிறைச்சாலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...