34 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் தகவல்

Share

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் தகவல்

இலங்கையில் (Sri lanka), கண்டி (Kandy)- போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நீதிஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை 1959 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலும் 31 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் 1969 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையிலும் 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அதற்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...