செய்திகள்இலங்கை

யாழில் நேற்று மட்டும் 414 தொற்றாளர்கள்!!

Share
covid cells
Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அன்ரிஜென் பரிசோதனைகளில் 364 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சாவகச்சேரியில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் 124 பேரும், கரவெட்டியில் 102 பேரும், பருத்தித்துறையில் 56 பேரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அண்மைய நாள்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம் கொரோனா அபாய வலயமாக மாறி வருகின்றது.

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...