செய்திகள்அரசியல்இலங்கை

மாகாணத் தேர்தலுக்கு 4 ஆயிரம் மில்லியன்!!

Share
National
Share

விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி செலவாகுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த முடியுமெனவும், புதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதற்காக நீண்ட காலத்தை செலவழிக்க நேரிடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பழைய முறைமையின்கீழ்தான் மாகாணத் தேர்தல் இடம்பெறும்.

பழைய முறைமையின் கீழ் மாகாணத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் தேர்தலை நடத்துவதாக இருந்தாலும் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...